அவிநாசி: சேவூர் லுார்து அன்னை தேவாலய திருவிழா காெடியேற்றத்துடன் துவக்கம்

அவிநாசி சேவூர் அருகே லுார்துபுரத்தில் அமைந்துள்ள லுார்து அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அவிநாசி சேவூர் அருகேயுள்ள, லுார்துபுரத்தில் அமைந்துள்ள, லுார்து அன்னை திருத்தல திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு, ஜெபமாலை, திருப்பலி, வேண்டுதல் தேர்பவனியுடன் கொடியேற்றம் நடந்தது. கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட்பணி. பிரான்சிஸ், தலைமை வகித்தார்.
வரும், 15ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு, கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், ஜெபமாலை, திருப்பலி, வேண்டுதல் தேர்பவனி நடக்கிறது. 16ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, உறுதிபூசுதல் மற்றும் வேண்டுதல் தேர்பவனி நடத்தப்பட உள்ளது. காலை, 11:00 மணிக்கு திருப்பலி நடக்கிறது.மாலை, 6:00 மணிக்கு வேண்டுதல் தேர் பவனி நடத்தப்பட இருக்கிறது.
விழா ஏற்பாடுகளை, பங்குகுருக்கள் விக்டர் சந்தியாகு, சிஜூ மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர். அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைக்கு உட்பட்டு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தேவாலய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu