அவினாசி பேரூராட்சியில் காங்., கட்சியினர் வேட்புமனு தாக்கல்

அவினாசி பேரூராட்சியில் காங்., கட்சியினர் வேட்புமனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சியினர்.

அவினாசி பேரூராட்சியில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளர்கள், நான்கு வார்டுகளில் மனு தாக்கல் செய்தனர்.

அவிநாசி பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சிக்கு, நான்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மகளிரணி வட்டார தலைவர் கருணாம்பாள், 8வது வார்டிலும், நகர செயலாளர் செந்தில், 13வது வார்டிலும், நகர தலைவர் கோபாலகிருஷ்ணன், 16வது வார்டிலும், ஐ.டி., பிரிவு நிர்வாகி சாய்கண்ணனின் மனைவி, திலகம், 14வது வார்டிலும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business