/* */

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில் போராட்டம்

மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில், குன்னத்தூரில் இன்று போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர், கோபி சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடை பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், முக்கிய சாலையின் முகப்பு பகுதியில் இருப்பதாலும் ஏராளமான வாகன விபத்து ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில், பொதுமக்களின் நலன்கருதி, இந்த மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, அருந்ததியர் எழுச்சி பேரவை சார்பில், குன்னத்தூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுபானக்கடைக்கு முன்பாக, பெண்கள் உள்ளிட்ட பலர் திரண்டு, கோஷம் எழுப்பினர்.

தகவல் அறிந்த குன்னத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் முதல்நிலைக் காவலர்கள் வந்து, மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறை நிர்வாகிகளிடம் பேசி, விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 5 July 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு