/* */

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்: அன்னுாரில் ஊராட்சிகள் தேர்வு
X

தமிழக அரசு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை செயல்படுத்துகிறது. கடந்த நிதியாண்டில், அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு, அன்னுார் ஒன்றியத்தில் பொகலுார், ஆம்போதி, அக்கரை செங்கப்பள்ளி, வடவள்ளி, அ.மேட்டுப்பாளையம் என, ஐந்து ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.

நடப்பு நிதியாண்டில் அல்லப்பாளையம், ஒட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பம்பாளையம் என, நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா 30 லட்சம் வீதம், ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ஒதுக்கப்படும் நிதியில் குடிநீர் பணிக்கு 30 சதவீதம், தெருவிளக்கு, சாலைக்கு 20 சதவீதம், மயானம், கிராம மேம்பாடு, சுய உதவி குழு திறன் மேம்பாட்டுக்கு தலா 10 சதவீதம், பள்ளிக் கட்டடங்கள் சீரமைப்புக்கு 15 சதவீதம் என பிரித்து பணிகள் செய்ய வேண்டும். இதற்காக, விரைவில் பணிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் என்றனர்.

Updated On: 21 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?