/* */

100 Crores Fraud Case- பல்லடத்தில் ரூ.100 கோடி மோசடி வழக்கு; எஸ்.பி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

100 Crores Fraud Case- பல்லடத்தில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கை மாவட்ட போலீஸ் எஸ்.பி விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

100 Crores Fraud Case- பல்லடத்தில் ரூ.100 கோடி மோசடி வழக்கு; எஸ்.பி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
X

100 Crores Fraud Case- ரூ. 100 கோடி மோசடி வழக்கை எஸ்.பி விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு (கோப்பு படம்)

100 Crores Fraud Case, SP Investigation, High Court Orders- பல்லடத்தில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் விஜயகுமாா் (46), சிவகுமாா் (43), வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் பிரவீணா (36). இவா்கள் மூவரும் கூட்டாக இணைந்து, சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாகக் கூறி திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், கடலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்தனா்.

இது தொடா்பான புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீஸாா், பிரவீணா, சிவகுமாா் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு சென்னை உயா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த மோசடி வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரத்தினசாமி கூறியதாவது,

இந்த மோசடி வழக்கு தொடா்பாக சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை மேற்கொண்டாா். கைது செய்யப்பட்ட சிவகுமாா், பிரவீணா இருவரும் நிபந்தனை ஜாமினில் விடப்பட்டதால் இருவரும் மாயமாகினா். ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் 10 மாதங்களாக ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என போலீஸாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா். மேலும் இந்த வழக்கை திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரிக்க வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையை 45 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா் என்றாா்.

Updated On: 9 Nov 2023 10:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்