/* */

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

வாணியம்பாடி அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
X

போக்சோவில் கைதான ராஜேஷ் என்கின்ற யுவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆம்பூர் அருகே பெரியவரிகம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்கின்ற யுவராஜ் என்ற வாலிபர் அந்த சிறுமியை கடந்த 1 ஆண்டாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் தன் மகள் காணாமல் போனதாக கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற போலீசார் செல்போன் நெட்வொர்க்கை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 Feb 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்