/* */

போன் எண் கேட்டு தொந்தரவு : ஊர்க்காவல் படைவீரர் மீது பொங்கி எழுந்த பெண்

வாணியம்பாடியில் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்த ஊர்காவல் படைவீரரை இளம் பெண் போலீசில் பிடித்துக் கொடுத்தார்.

HIGHLIGHTS

போன் எண் கேட்டு தொந்தரவு : ஊர்க்காவல் படைவீரர் மீது பொங்கி எழுந்த பெண்
X

வாணியம்பாடியில் பெண்ணிடம் செல்போன் எண் கேட்டு தொந்தரவு செய்த ஊர்காவல் படைவீரர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன். இவர் 5 ஆண்டுகளாக வாணியம்பாடியில் ஊர் காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் திருப்பத்தூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்வதற்காக தோழியுடன் பேருந்து நிலையத்திற்க்கு வந்துள்ளார்.

அங்கு பேருந்திற்காக காத்திருந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஊர் காவல் படை சேர்ந்த சபரிநாதன் அந்த பெண்ணையே சுற்றி சுற்றி வந்ததாகவும், செல் போன் எண் கேட்டு தொந்தரவு செய்தும்,

கொடுக்காததால் சபரி தன்னுடைய செல் போன் எண் அருகே உள்ள இரு சக்கர வாகனத்தில் எழுதி வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண் பயந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.

அப்போது சக பயணிகள் ஒன்று கூடிய பின்னர் அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அப்போது பெண்ணுடன் சேர்ந்து சக பயணிகள் அந்த ஊர் காவல் படை சேர்ந்த சபரிநாதனை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு தலைமறைவான சபரிநாதனை தேடி வருகின்றனர்.

Updated On: 24 Aug 2021 1:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு