/* */

கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம்

வாணியம்பாடி நகராட்சியில் கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா நோய்க்குறி அணுகுமுறை ஆய்வு கூட்டம்
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா நோய் தீவிரமாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நோய்க்குறி அணுகுமுறை (Syndromic approach) என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டம் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணியம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இத்திட்டத்தில் கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர், DBC பணியாளர்கள் வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறை, மற்றும் தன்னார்வலர்கள் என்று ஒரு குழுவோடு, வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆக்சன் லெவல் அளவு குறைவாக இருப்பின் அவர்களை கண்டறிந்து, பாதிப்பின் தன்மையை பொருத்து, வீட்டில் தனிமைபடுத்துவதா, கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைபடுத்துவதா, அல்லது அரசு மருத்துவ மனையில் தனிமை படுத்துவதா, என்னும் கணக்கெடுப்பு நடத்த படவேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் டிஎஸ்பி பழனி செல்வம் நகராட்சி ஆணையாளர், வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி வட்டாட்சியர் மோகன் மற்றும் அனைத்து துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்...

Updated On: 18 May 2021 2:22 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  2. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  3. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  4. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  7. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  8. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. அரசியல்
    நாடு முழுவதும் மாற்றத்திற்கான புயல் வீசுகிறது: சொல்கிறார் ராகுல்...