Begin typing your search above and press return to search.
கிரிசமுத்திரம் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி: வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு
வாணியம்பாடி அருகே பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலைச்செல்வி, தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆலங்காயம் வட்டார மருத்துவர் பசுபதி கலந்துகொண்டு, வளரிளம் பெண்களுக்கான, நலக்கல்வி பற்றி உரை நிகழ்த்தினார்.
இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அம்மு, ஆசிரியர்கள், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.