/* */

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு

வாணியம்பாடியில் அனைத்து வணிகர்கள் ஒன்றிணைந்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நகராட்சியில் கோரிக்கை மனு கொடுத்தனர்

HIGHLIGHTS

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி  கோரிக்கை மனு
X

வாணியம்பாடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க தண்ணீரில் நடந்து வந்த வணிகர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி அதனுடைய உபரி நீரானது தற்பொழுது வாணியம்பாடி நகரப்பகுதியில் சூழ்ந்துள்ளது. இதனால் பிரதான சாலையான சி.எல் சாலை, மலங்ரோடு, அரசு மருத்துவமனை சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ள நீர் ஆறாக ஓடுகிறது.

இந்நிலையில் அனைத்து வணிகர் சங்கம் மற்றும் வணிகர்கள் சார்பில், நீர் நிலைகள் செல்லக்கூடிய கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அதனை அகற்றி நீர் நிலைகளை சரியான பாதையில் திருப்ப நடவடிக்கை எடுக்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

வணிகர்கள் 300க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து ஒன்று கூடி ஜின்னா மேம்பாலம் இருந்து முக்கிய சாலை வழியாக வாரசந்தைசாலை, சி.எல் சாலை, பேருந்து நிலையம் வழியாக தண்ணீரில் நடந்தவாறு நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆக்ரமிப்புகளை அகற்ற மனுக்களை கொடுத்தனர்

Updated On: 23 Nov 2021 3:41 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு