/* */

வாணியம்பாடி கிளைசிறையில் மூன்று பேருக்கு  கொரோனா

வாணியம்பாடியில் கிளை சிறை காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் என‌ மூன்று பேருக்கு  கொரோனா வைரஸ் நோய்தொற்று.

HIGHLIGHTS

வாணியம்பாடி கிளைசிறையில்   மூன்று பேருக்கு  கொரோனா
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அரசினர் தோட்ட வளாகத்தில் கிளை சிறைச்சாலை உள்ளது. இதில் ஜெயில் வார்டன் ஜெயக்குமார், இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் மற்றும் தூய்மை பணியாளர் திகில்ராஜ் ஆகியோருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

அதன் பேரில் ஜெயக்குமார் கந்திலி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் காவலர் விக்னேஷ் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்

தூய்மைப் பணியாளர் திகில் ராஜ் அக்ரஹாரம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை காவலர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதால், கைதிகள் மற்றும் காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நகராட்சி பணியாளர்கள் சிறைச்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

Updated On: 11 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?