/* */

வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா.

HIGHLIGHTS

வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
X

வாணியம்பாடி அருகே நிலத்தை அளவிட பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மனைவி லட்சுமி இவர்களுக்கு 3 பிள்ளைகள் ரீட்டா, ரோசி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் தந்தை ஜோதி மற்றும் தாய் லட்சுமி ஆகியோர் உயிரிழந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து தரவேண்டி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ரீட்டா மற்றும் அவரது அண்ணன் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குடும்பத்தினருடன் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர் விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு போராட்டத்தை கைவிட்டனர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து பிரித்து தருவதாக அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு ரீட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் கலைந்து சென்றனர்.

Updated On: 26 Aug 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  2. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  6. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  7. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  8. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  9. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  10. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...