/* */

ஆலங்காயம் காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு

ஆலங்காயம் காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு செய்த போது குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

HIGHLIGHTS

ஆலங்காயம் காவலர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு
X

காவலர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொள்ளும் எஸ்பி பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது காவல்நிலையத்தில் வருகைப் பதிவு மற்றும் வழக்கு சம்பந்தமாக ஒவ்வொரு காவலர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஆலங்காயம் காவலர் குடியிருப்பு சென்ற மாவட்ட எஸ்பி அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர் குடியிருப்பு பகுதியில் குடிநீர், கால்வாய் மற்றும் மின் இணைப்புகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என காவலர் குடும்பத்தினர் எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு போன் செய்து இதனை சரி செய்ய உத்தரவிட்டார்..

Updated On: 30 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...