/* */

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் எஸ்.பி பாலகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு
X

தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அண்ணாநகரில் உள்ள செக்போஸ்ட் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோன்று மலைப்பகுதி இருக்கக்கூடிய மாதகடப்பா செக் போஸ்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காவலர்கள் தங்குவதற்கு ஓலைக் குடிசை அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட அவர், ஓலைக்குடிசை அகற்றி காவலர்கள் பாதுகாப்பாக இருக்க தகரத்தால் செய்யப்பட்ட அறை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவும், பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய காவலர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 12 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...