/* */

விநாயகர் சிலையை பொது இடங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை: காவல்துறை

வாணியம்பாடியில் விநாயகர் சிலையை பொது இடங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

விநாயகர் சிலையை பொது இடங்கள் வைப்பதற்கு அனுமதி இல்லை: காவல்துறை
X

விநாயகர் சதுர்த்தி கொண்ட்டாட்டம் தொடர்பாக வாணியம்பாடி காவல் நிலையத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

வாணியம்பாடி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து ஆலோசனைக்கூட்டம் டிஎஸ்பி பழனி செல்வம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி எஸ்பி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாரதி ஜனதா கட்சி மற்றும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதில் 22 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என கோரிக்கை மனுவை பாஜக பொதுக்குழு உறுப்பினர் சிவபிரகாசம் மனுவை கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதாக கூறினர்.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் தங்களுடைய வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என பொது இடங்களில் வைக்கக்கூடாது என திட்டவட்டமாக கூறி அனுப்பி வைத்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக கட்சிப் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் இந்து அமைப்பினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 5 Sep 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு