/* */

100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்

கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

HIGHLIGHTS

100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்
X

கோவிந்தாபுரம் கிராம சபை கூட்டத்தில் தடுப்பூசி முகாம் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட, கோவிந்தாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் தீர்மானங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்ற படுவதாக உறுதியளித்தனர்.

இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில், கிராம சபாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் வார்டு உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Updated On: 25 Nov 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்