/* */

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் நடத்திய அதிரடி சாராய வேட்டையில் சாராய ஊறல்கள் மற்றும் மூலப்பொருட்கள் அழிப்பு

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே தமிழக காவல்துறையினர் அதிரடி சாராய வேட்டை 
X

சாராயம் காய்ச்ச பயன்பட்ட அடுப்பை அழித்த காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொரிபள்ளம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரி டியூப்களில் நிரப்பி கொண்டு இருசக்கர வாகனத்தில் கடத்துவதாக திருப்பத்தூர் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பி தனிப்படை உதவி ஆய்வாளர்கள் கணேசன் மற்றும் பிரகாசம் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு கொரிபள்ளம் மலை பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது சாராயம் காய்ச்சவதற்காக வைக்கப்பட்டிருந்த 7000 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 3 அடுப்புகள் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் பைப்புகள், 2 டன் விறகு போன்றவற்றை கைப்பற்றி மலைப்பகுதியில் தீயிட்டு அழித்தனர். தலைமறைவாக உள்ள நடராசன் மற்றும் அன்பரசன் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..

Updated On: 7 Sep 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...