/* */

வாணியம்பாடியில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

வாணியம்பாடியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

வாணியம்பாடியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நவம்பர் மாதம் 1ஆம் தேதி இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தமிழக அரசின் வாதங்கள் சரியாக முன்வைக்கவில்லை என கூறி 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்ப வழங்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர் அதன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 2 Nov 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது