/* */

சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை: கே.சி. வீரமணி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி

HIGHLIGHTS

சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை:  கே.சி. வீரமணி
X

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற அலுவலகத்தை கேசிவீரமணி திறந்து வைத்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி. வீரமணி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து தொகுதி முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தன் பணியை தொடங்கி உள்ளார் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகை தந்து அல்லது தொடர்பு கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீண்டும் கட்சியில் சேர தலைமை தான் முடிவு செய்யும். அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாக ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. அது முழுவதும் பொய்யான செய்தி. வேலூர் மாவட்டம் எப்போதும் இது அதிமுகவின் கோட்டையாக உள்ளது. எடப்பாடி பழனி்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் அதிமுக தலைமை என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு கட்டுப்படுவோம்.

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. பலமுறை இது போன்று கொலை முயற்ச்சி களை பிரச்சனைகளை அவர் சந்தித்துள்ளார். அவர் பனங்காட்டு நரி, இந்த சலசலப்புகள் எல்லாம் அஞ்சிட மாட்டார். அவர் கடந்து வந்த காலங்களை பாதைகளைப் பார்க்கும்பொழுது பல எதிர்ப்புகளை தாண்டிதான் அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார் என்று கூறினார்.

பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Updated On: 10 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!