Begin typing your search above and press return to search.
14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: துணை ஆட்சியர் ஆய்வு
ஆலங்காயம் வட்டாரத்தில் நடைபெற்ற 14-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் துணை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நிம்மியம்பட்டு கிராமத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் வீடு தேடி நடைபெற்று வரும் 14-வது மெகா தடுப்பூசி முகாமை துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும், துணை இயக்குனர் செந்தில் (சுகாதாரப்பணிகள்), வட்டாட்சியர் மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, மருத்துவர் மதன்ராஜ், மற்றும் வருவாய் ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர் அங்ன்கன்வாடி பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.