/* */

வாணியம்பாடியில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம் கலெக்டர் அதிரடி

வாணியம்பாடி உழவர் சந்தையில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அதிரடியாக தெரிவித்தார்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் குப்பை  கொட்டினால் ரூ50 ஆயிரம் அபராதம்  கலெக்டர் அதிரடி
X

வாணியம்பாடி உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தை பகுதியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொண்டுவர கூடிய காய்கறிகள் முறையாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனை செய்துவிட்டு குப்பைகள் கொட்டாமல் பார்த்துகொள்ள வேண்டும் என நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் உத்தரவு மீறி காய்கறிகள் மற்றும் குப்பைகளை அருகிலுள்ள கிளை ஆறுகளில் கொடுக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு ரூ 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் ஆற்றுப்படுகையில் சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டு குப்பைகள கொட்டும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்றார்.

ஆய்வின் போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் மோகன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் சுசில் தாமஸ் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 22 Aug 2021 5:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு