/* */

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு  நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
X

தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வாங்க 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் டோக்கன் வாங்க அனைவரும் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.

இதில் பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய 4 பெண்கள் பலியானதை அடுத்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கடும் காயம் அடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற 3 பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Feb 2023 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு