Begin typing your search above and press return to search.
வாணியம்பாடி டி.எஸ்.பி அலுவலகம்: காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்
வாணியம்பாடியில் புதிதாக கட்டப்பட்ட டி.எஸ்.பி அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக கட்டிடத்தை திறந்து வைத்தார்
HIGHLIGHTS
வாணியம்பாடியில் புதிதாக கட்டப்பட்ட டி.எஸ்.பி அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனை மாவட்ட எஸ் பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக திறப்பு விழாவில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மரக்கன்றுகளை நட்டு ஆரம்பித்து வைத்தார்
இவ்விழாவில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் நாகராஜ், தமிழ்நாடு வீட்டு வசதி அதிகாரிகள்,மற்றும் காவல் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..