/* */

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நகை, பணம் மோசடி: இளைஞர் கைது, தந்தையிடம் விசாரணை

வாணியம்பாடியில் காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, நகை, பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த தந்தையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நகை, பணம் மோசடி:   இளைஞர் கைது, தந்தையிடம் விசாரணை
X

வாணியம்பாடியில் சிறுமி பாலியல் புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண்ணின் தாயார் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த ஃபைசல் கான் (வயது 21) என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அதில் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தது தெரியவந்தன அதனைத் தொடர்ந்து திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஏமாற்றியதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இளைஞர் பைசல் கான் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் இவருக்கு துணையாக இருந்த அவரது தந்தை கரீம் கான் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் வாணியம்பாடி அருகே 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 27 Jun 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்