/* */

மத்திய அரசு தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை தரவில்லை: துரைமுருகன்

பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று கூட மத்திய அரசு தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை 1 ரூபாய் கூட தரவில்லை என துரைமுருகன் கூறினார்

HIGHLIGHTS

மத்திய அரசு  தரவேண்டிய  பாக்கி தொகையை இதுவரை தரவில்லை:  துரைமுருகன்
X

வாணியம்பாடி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட அமைச்சர் துரைமுருகன் வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

பின்னர் பேசிய அமைச்சர் துரைமுருகன், பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கி தந்திருக்கிறார்கள். டெல்லி சென்று நானும் முதல்வர் பிரதமரிடம் சென்று மத்திய அரசு தரவேண்டிய பாக்கி தொகைகள் குறித்து விரிவாக முதல்வர் எடுத்துரைத்தார். உடனடியாக பிரதமர் சொன்னார் ஒரு மாதத்திற்குள் அனைத்து பணத்தையும் கொடுக்கப்படும் என்று சொன்னார். ஆனால் தற்போது வரை 1 நயா பைசா கூட தரவில்லை

மேலும் வாணியம்பாடியில் நல்ல கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்தால் நல்லது நடக்கும் இல்லையெனில் 5 ஆண்டு காலம் வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக பேசினார்

நிகழ்ச்சியில் வேலூர் எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் தேவராஜ், வில்வநாதன் மற்றும் நகர பொறுப்பாளர் சாரதிகுமார், மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 14 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்