/* */

தந்தையின் கண்முன்னே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

வாணியம்பாடி அருகே ஏரியில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த சிறுவன் தந்தை கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்.

HIGHLIGHTS

தந்தையின் கண்முன்னே ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
X

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் இவர் சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது அவரது மகன் சுஜித்குமார் (வயது 10 ) மற்றும் சுஜித்குமாரின் நண்பர்கள் 2 பேர் அங்குள்ள ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென சுஜித் குமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மயங்கி உள்ளார் உடனடியாக அவரது தந்தை பெருமாள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்‌.

Updated On: 18 Aug 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!