/* */

வாணியம்பாடியில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

வாணியம்பாடியில் கொரோனா நிதியை வழங்க சென்ற அதிமுக எம்எல்ஏவை திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்; பரபரப்பு

HIGHLIGHTS

வாணியம்பாடியில்  அதிமுக,  திமுகவினரிடையே வாக்குவாதம்
X

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திம்மாம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிதியுதவி 2000 ரூபாயை வழங்குவதற்காக சென்ற வாணியம்பாடி சட்டமன்ற அதிமுக உறுப்பினர் செந்தில்குமாரை திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக நிர்வாகி உங்கள் ஆட்சியில் நீங்கள் வழங்கினீர்கள் இது எங்கள் ஆட்சி நாங்கள்தான் வழங்குவோம் என செந்தில்குமார் இடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் இது ஸ்டாலின் பணம் அல்ல இது பொது மக்கள் வரிப்பணம் என்று சொன்னதால் ஒருவருக்கு ஒருவர் இடையே வாக்குவாதம் முற்றி சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது திமுகவினர் இடையே பேசிய சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நான் மக்கள் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிதி உதவி வழங்க வந்துள்ளேன் என்று கூறினார்.

பின்னர் அதிகாரிகள் இரு கட்சி நிர்வாகிகளையும் சமாதானப்படுத்தி, பின்னர் கொரோனா நிதியை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார்

Updated On: 16 May 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!