/* */

வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக எம்எல்ஏ சென்றதாக கூறி அதிமுகவினர் சாலைமறியல்

ஆலங்காயம் வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக எம்எல்ஏ சென்று விட்டதாக கூறி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்

HIGHLIGHTS

வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக எம்எல்ஏ சென்றதாக கூறி அதிமுகவினர் சாலைமறியல்
X

வாக்கு எண்ணும் மையத்துக்குள் திமுக எம்எல்ஏ சென்றதாக கூறி சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஆலங்காயம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் 27, கிராம வார்டு உறுப்பினர்கள் 237, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18, மாவட்ட குழு உறுப்பினர்கள் 2 ஆகிய பதவிகளுக்கு தேர்தல் 9 ஆம் தேதி நடைபெற்றது.

தேர்தலின்போது பதிவான வாக்கு பெட்டிகள் ஆலங்காயத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதனையொட்டி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட பொறுப்பாளருமான க‌.தேவராஜ் காரில் வந்து வாக்குப்பெட்டிகள் வெளியில் வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அவரை போலீசார் அனுமதித்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது மேலும் உள்ளே வந்த பொழுது வாக்குப் பெட்டிகளை சீல் உடைக்கப்பட்டு உள்ளதாகவும் அதனுடைய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதாக சுட்டி காட்டி அதிமுகவினர் வாக்கு எண்ணும் மையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஒரு கட்டத்தில் அதிமுகவினர் அதிகளவில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது உள்ளே சென்ற அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டன அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் தகவல் அறிந்து. வாக்கு எண்ணும் மையத்திற்கு வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி செந்தில்குமார், மற்றும் வாணியம்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் ஆகியோர் வந்தனர் அதனைத் தொடர்ந்து உள்ளே சென்று சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் இது குறித்து கேட்டறிந்து உள்ளனர் அதனைத் தொடர்ந்து மையத்துக்குள் அவரை அனுமதித்தது யார் என்ற கேள்விகளை முன்வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் இடையே வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் அங்கிருந்து அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Updated On: 10 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  4. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  5. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  6. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  7. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  8. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  9. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  10. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்