/* */

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் மது பாட்டிலை கடத்திவர் கைது

வாணியம்பாடி அருகே அரசு டாஸ்மாக் கடையில் இருந்து கள்ளத்தனமாக விற்பனைக்கு எடுத்து வந்த 550 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே ஆட்டோவில் மது பாட்டிலை கடத்திவர் கைது
X

கடத்திவரப்பட்ட 550 மது பாட்டில்களுடன், கைதான ராஜ் மகேஷ்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசியத் தகவல் கிடைத்தது.

மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வாணியம்பாடி திம்மாம்பேட்டை சாலையில் தனிப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திம்மாம்பேட்டை அரசு டாஸ்மாக் கடையில் இருந்து வாணியம்பாடிக்கு ஆட்டோ மூலமாக 11 அட்டை பெட்டிகளில் 550 மது பாட்டில்களை விற்பனைக்காக எடுத்து வந்தபோது போலீசார் வாகன தணிக்கையில் சிக்கியது.

போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜ் மகேஷ் (வயது 30) தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து அவர் கொண்டுவந்த மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 July 2021 3:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?