/* */

வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல்
X

வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி ஆணையாளரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட புதூர், பெருமாள்பேட்டை, நியூடவுன், பெரிய பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலங்காயம் அடுத்த வெப்பலம்பட்டி பகுதியில் இருந்து பெருமாள்பேட்டை வழியாக வாணியம்பாடி வந்த மளிகை கடை உரிமையாளர் சதீஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த 65 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் புதூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையின் போது பெரியபேட்டை பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 69 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 28 Jan 2022 9:23 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...