/* */

118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று பெருவெள்ளத்தில் உயிரிழந்தோருக்கு நினைவு அஞ்சலி

வாணியம்பாடி பாலாற்று பெருவெள்ளத்தில் 118 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த 200 நபர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

118 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்று பெருவெள்ளத்தில்  உயிரிழந்தோருக்கு நினைவு அஞ்சலி
X

பாலாற்று வெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவு தூணுக்கு மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கச்சேரி சாலையில் உள்ள பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்த 200 பேரின் நினைவாக நினைவுத்தூண் வைக்கப்பட்டுள்ளது.

1903ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் இதே நாள் 12-11-1903 அன்று ஏற்பட்ட பாலாற்று பெருவெள்ளத்தில் சிக்கி வாணியம்பாடி நகரத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் உயிரிழந்தனர். 118வது நினைவு தினத்தை முன்னிட்டு பாலாறு பாதுகாப்பு சங்கதலைவர் வெங்கடேசன் தலைமையில் இறந்த 200 பேரின் நினைவு தூணுக்கு மலர் மாலைகள் வைத்து மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் திரளானோர் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் மீண்டும் பாலாற்றில் பெருவெள்ளம் வருவதை தடுக்க மக்கள் யாரும் பாலாற்றை ஆக்கிரமிப்பை செய்ய கூடாது கழிவுகளை கலக்க கூடாது நதியை தெய்வம் போல் கருத வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அஞ்சலி செய்யப்பட்டது.

இந்த நிகழ்வின் போது அம்பலூர் அசோகன் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Updated On: 12 Nov 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?