Begin typing your search above and press return to search.
ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
வாணியம்பாடி ஜோலார்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி அம்மா மினி க்ளினிக் மருத்துவமனையில் நடைபெற் போலியோ சொட்டு மருந்து முகாமினை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவனருள்,மாவட்ட எஸ்பி., விஜயகுமார் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.