/* */

ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்

பூங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்

HIGHLIGHTS

ஆசிரியர் பற்றாக்குறை என கலெக்டரிடம் மனு கொடுத்த பள்ளி மாணவர்கள்
X

மாணவர்களின் கோரிக்கையை செவிமடுக்கும் கலெக்டர் அமர் குஷ்வாஹா 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.

எனவே 190 மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி கற்றுத்தர முடியவில்லை என கூறியும் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவண செய்ய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் பள்ளிக்குச் சென்றனர்

Updated On: 13 Dec 2021 4:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...