திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளுக்கு  மட்டும் இன்று விடுமுறை
X
திருப்பத்தூர் மாவட்டத்தில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக, மாவட்டத்தில் ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும், இன்று விடுமுறை எனவும்; ஆறாம் வகுப்பு முதல், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய, அனைத்து கல்லூரியும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture