திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய கலெக்டர்

திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய கலெக்டர்
X

திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய கலெக்டர்

திருப்பத்தூரில் 20 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா  வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை இதுவரை பெறாதவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை பெற சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா புதிய மின்னணு குடும்ப அட்டைகளை 20 திருநங்கைகளுக்கு வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் மற்றும் வழங்கல் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!