/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருப்பத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க  திருப்பத்தூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

HIGHLIGHTS

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருப்பத்தூரில் போலீசார் கொடி அணிவகுப்பு
X

நகர்ப்புற தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க திருப்பத்தூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் தீவிரமடைந்து உள்ளது.

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் 162 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க, தி.மு.க., பா.ஜ.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதிமையம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இந்தக் கொடி அணிவகுப்பு திருப்பத்தூர் நகர பகுதி வீதிகளில் கோட்டை தெருவிலிருந்து அண்ணா நகர், கௌதம் பேட்டை, காந்திநகர், உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்துகொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

Updated On: 15 Feb 2022 4:19 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...