/* */

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ரத்ததானம் நடந்தது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
X

திருப்பத்தூர் அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பத்தூர் தாலுகா பள்ளத்தூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு கல்லூரி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப.நரசிம்மன், வரவேற்று பேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் மு.சந்தோஷ்குமார், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார். காவல் உதவி ஆய்வாளர் கோதண்டன், ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிடுவோம், பிளாஸ்டிக் பைக்கு மாறாக துணிப்பையை பயன்படுத்துவோம், இயற்கையை பின்பற்றி வாழ்வோம், வாழ்நாளில் முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு மாணவர்கள் சென்றனர். முடிவில் பேராசிரியர் மா.பிரகாசம் நன்றி கூறினார்.

சந்திரபுரம் ஊராட்சியில் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் செந்தில் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜவஹர்லால் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் கவிதா வரவேற்று பேசினார். இதல் ரத்த பரிசோதனை, கண் சிகிச்சை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் 24 பேர் ரத்ததானம் செய்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் கலைச்செல்வி, உதவி பேராசியர்கள் கோபால், யாழனி, மகேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்