ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு
![ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2021/12/25/1438124-videocapture20211225-150321.webp)
தண்டவாளம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட வாலிபர்
திருப்பத்தூர் மாவட்டம் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்கிற சாந்தகுமார் ( வயது 40) டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்தநிலையில் இவருக்கு அதிக கடன் தொல்லை இருப்பதாக உறவினர் தெரிவிக்கின்றனர். இதனால் நேற்று இரவு சாந்தகுமார் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளார். இதனால் உறவினர்கள் நேற்று இரவு முதல் சாந்தகுமாரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கடன் தொல்லையால் மனமுடைந்த சாந்தகுமார் இன்று திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாந்தகுமாரின் உடலில் ரயிலில் அடிபட்டது போல் காயங்கள் பெரிதளவு இல்லை என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்...
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu