Begin typing your search above and press return to search.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி.
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இந்த மழையானது நேற்று முதல் விடிய விடிய மழை நீடித்து தற்போதுவரை பெய்து கொண்டே இருக்கிறது
இதன் காரணமாக வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள், மழை நீர் சேர்ந்து சாலைகளில் நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதேநேரத்தில் தொடர்மழை காரணமாக வெப்பம் தணிந்து தற்பொழுது குளிர்ச்சியான நிலவு நிலவிவருகிறது
இருந்தபோதிலும் இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பயிர்கள் சேதம் அடையும் நிலை உள்ளது.