Begin typing your search above and press return to search.
திருப்பத்தூர் மாவட்ட கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் கொரோனா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கிராமப்புறங்களில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் மகளிர் சுய உதவிக் குழு வட்டார மேலாளர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் கிராமப்புறங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்தும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.