திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி
X
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து துறை அலுவலர்கள் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும் சமநலச் சமுதாயமும் சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், நீதி, எண்ணம், அதன் அரசியல் கோட்பாடு. இவற்றில் தன்னுரிமை, சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம் இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும்,

அவர்கள் அனைவரிடையேயும் தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையவராய், நம்முடைய அரசமைப்புப் பேரவையில், 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று, ஈங்கு இதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். என்ற இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வில்சன்ராசசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story