திருப்பத்தூர் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி துவக்கம்

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணி தொடங்கியது.
திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதனையொட்டி திருப்பத்தூர் நகராட்சி சார்பில் 1 முதல் 36 வார்டுகளில் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.
நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா, நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா, பணிகளை தொடங்கி வைத்தனர்.
துப்புரவு ஆய்வாளர் விவேக் தலைமையில் 40 துப்புரவு பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர், பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 36 வார்டுகளிலும் தூய்மை பணி நடைபெறும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu