/* */

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி உயிரிழப்பு போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு
X

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர்.

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி உயிரிழப்பு. நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத ஆத்தூர்குப்பம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி ஒன்று ஓரமாக திருப்பியபோது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று ஈச்சர் லாரி பின்னாடி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த சென்னை ஜீவன் பீமா நகர் பகுதியைச் சேர்ந்த அனில் வாலியா, அவரது மனைவி மஞ்சு வாலியா ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி காரில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஈச்சர் லாரி ஓட்டுநர் திருப்பத்தூர் பாச்சல் பகுதியை சேர்ந்த நித்யானந்தம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்றம்பள்ளி அருகே ஈச்சர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 30 Nov 2021 2:41 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...