/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் பரிசீலனையில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்கப்பட்டன.

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 மனுக்கள் தள்ளுபடி; 996 மனுக்கள் ஏற்பு
X

பைல் படம்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 4 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளில் உள்ள 171 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 1042 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு பரிசீலனையில் 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 996 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 219 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 204 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 123 மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 114 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 292 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 280 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 210 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 201 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 71 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 71 மனுக்களும் ஏற்கப்பட்டது. உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 64 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 64 மனுக்களும் இயக்கப்பட்டது. ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 63 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 62 மனுக்கள் ஏற்கப்பட்டு 1 மனு நிராகரிக்கப்பட்டது.

Updated On: 6 Feb 2022 2:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...