திருப்பத்தூரில் ஆன்லைன் லாட்டரி நடத்தியவர்கள் கைது

திருப்பத்தூரில் ஆன்லைன் லாட்டரி நடத்தியவர்கள் கைது
X
திருப்பத்தூரில் ஆன்லைன் லாட்டரி நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி நடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் திருப்பத்தூரில் ஆன்லைன் லாட்டரி நடத்தி வந்த சின்ன குளத்து மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் பெருமாள் (வயது 38), இமாம் ஹாகிம் தெருவைச் சேர்ந்த காஜிம்கான் மகன் யூசுப் (வயது 52) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து லேப்டாப் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Next Story