/* */

வாணியம்பாடி அருகே எருது விடும் திருவிழா

வாணியம்பாடி அருகே  எருது  விடும்  திருவிழா
X

வாணியம்பாடி அருகே திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருது விடும் திருவிழாவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை மற்றும் நிம்மியம்பட்டு பகுதிகளில் திரௌபதி அம்மன் மயில் திருவிழாவை முன்னிட்டு 66 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவினை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றி இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டு பின்னரே வாடிவாசலில் கொண்டு வந்து அவிழ்த்து விடப்பட்டது.

இதில் குறைந்த நொடிகளில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ. 51 ஆயிரம்,இரண்டாம் பரிசு ரூ. 41 ஆயிரம் ,மூன்றாம் பரிசு ரூ. 31 ஆயிரம் உட்பட 25 க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் முதல் மூன்று பரிசுகள் பெறும் காளைகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் அமைச்சர் நிதியில் இருந்து வழங்கினார். இதில் வாணியம்பாடி ,நிம்மியம்பட்டு ,கொத்தக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ,பெண்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவினை கண்டு ரசித்தனர்.

Updated On: 21 Jan 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு