/* */

நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி

நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி தொழிலாளி பலி
X

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியான கட்டிட தொழிலாளி கோபி.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத்தாண்டகுப்பம் ராஜா தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கோபி(33). கட்டிட தொழிலாளியான இவருக்கு மஞ்சுளா என்கின்ற மனைவியும், ஹேமலதா, யுவராஜ் ஆகிய குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கோபி தனது பைக்கில் கிருஷ்ணகிரி&வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மல்லப்பள்ளி கிராமம் கொய்யாகாமேடு முருகன் வீட்டின் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் லாசர் மகன் சுரேந்தர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Updated On: 8 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...