நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

பிரேத பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் 

நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை முத்தானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் விஷ்வா(வயது 20 ) இவர் கெஜல்நாயக்கன்பட்டி அரசு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று இரவு தன் வீட்டில் உள்ள மேல் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மின்மோட்டார் ஸ்விட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் விஷ்வா மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த அவருடைய உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் நகர போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story