/* */

நாட்றம்பள்ளி: குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

நாட்றம்பள்ளி அருகே மூன்று மாதங்களாக குடிநீர் சரிவர வராததால் அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

நாட்றம்பள்ளி: குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்
X

குடிநீர் வராததால்  அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த மூன்று மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி திடீரென காலிக்குடங்களுடன் பச்சூர்- திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மகாலட்சுமி பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார் பின்னர் ஊராட்சி செயளாலர் அருளிடம் பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். இருப்பினும் சமாதானம் ஆகாத பொதுமக்கள் ஊராட்சி செயலர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கிவருகிறார். தண்ணீர் இருந்தும் முறையான பைப் லைன் அமைத்து தராமல் காலம் தாழ்த்தி வருகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஊராட்சி செயலர் மீது வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து திம்மாம்பேட்டை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி செயலரிடம் இன்னும் ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்...

Updated On: 30 July 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்