/* */

ஜோலார்பேட்டை  அருகே செம்மரம் கடத்தல்: ஒருவர் கைது

ஜோலார்பேட்டை  அருகே காரில் கடத்தப்பட்ட செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை  அருகே செம்மரம் கடத்தல்:  ஒருவர் கைது
X

செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த ஜோலார்பேட்டை போலீசார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் காவலர்கள் சக்கரவர்த்தி ஜெயப்பிரகாஷ் சதாசிவம் ஆகியோர் கொண்ட குழு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேகமாக கார் ஒன்று வருவதை அறிந்த காவலர்கள், காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 6 செம்மரக்கட்டைகள் காரில் கடத்தப்பட்டது சோதனையில் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அந்த காரை ஓட்டிவந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட பெரியதள்ளபாடி பகுதியைச் சேர்ந்த முகமது கெளப் (வயது 30) என்பவரை கைது செய்தனர்

ஜோலார்பேட்டை போலீசார் செம்மரக்கட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...